ஸ்ரீராமா ஆஸ்ரமம் சிறப்பு அம்சங்கள்
யாகசாலை
யாகத்தில் புனிதமான பொருள்களை யாக குண்டத்தில் அர்ப்பணித்து மந்திரம், உச்சாடங்கள் மூலம் மன அமைதி, குடும்ப நன்மை, உடல் ஆரோக்கியம் போன்ற பன்முகப் பயன்களை வழங்குகிறது.
கோசாலை
இந்துக்களால் பசுவானது தெய்வத்தின் மறு உருவமாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்பசுக்களை அழிந்து விடாமல் காக்கவும், கோவில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட பசுக்களைப் பராமரிக்கவும் கோசாலை பயன்படுத்தப்படுகிறது.
தியான மண்டபம்
தியானம், மன அமைதி மற்றும் ஆன்மீகத்தேடலுக்கான இடமாகும். தனிநபர் முன்னேற்றம். ஆன்மீக வளர்ச்சி மற்றும் மன அமைதிக்கான மையமாக விளங்கும்.
நினைவுக்குடில்கள்
நமது புண்ணிய பூமியாம் ஸ்ரீராமா ஆஸ்ரம் வளாகத்தில் நமது மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தின் நினைவாக நினைவுக்குடில்கள் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதியோருக்கான ஆன்மீக இல்லம்
இங்கே தங்கும் முதியோர்களுக்கு ஆன்மீகச்சூழலில் இறைவழிபாட்டின் மூலம் அமைதியான வாழ்க்கையை உயர்ந்த சேவை மனப்பான்மையுடன் வழங்கும் புனித இல்லமாக அமைக்கப்படுகிறது.
ஆன்மீகச்சுற்றுலா ஏற்பாடு
இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய தளங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் ஆன்மீகச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.

